எப்படி அவளை நான் மறப்பேன்

எப்படி அவளை மறப்பேன்
மனம் முழுவதும் அவள்
நினைவுகளை மனந்திருக்கும்
நான் எப்படி அவளை
மறப்பேன் ?

அவள் மீது கொண்ட காதலால்
காத்திருந்து காத்திருந்து
காலனுக்கு கைதியானேன்
கண்ணீர் விட்டு
கண்ணீர் விட்டு
கரைந்து போனேன்
என் கண்ணீருக்கும்
என் காத்திருப்புக்கும்
அவள் காரணமாகி போனதால்
எப்படி அவளை நான்
மறப்பேன் ?

என்னை விட்டு அவள்
சென்ற பிறகும் அவள்
நினைவுகளுக்கு உருவகம் தந்து
தன்னிலை மறந்து எப்பொழுதும்
அவள் நாமத்தையே உளறி கொண்டிருக்கும்
நான் எப்படி அவளை
மறப்பேன் ?

அவளை காதலித்த பிறகு
அவள் சிந்தனையிலே
நிலைக்கும் என் மூளை
அவள் வெறுத்த பிறகும்
எப்படி அவளை மறக்க
நிந்திக்கும் சிந்திக்கும் இனிமேல் ?

கானல் நீராய் என் மீது அவள் கொண்ட
காதல் மறைந்த போதும்
கடல் நீராய் என்
கண்ணீர் அவளை நினைத்து
கதற எப்படி மறப்பேன் அவளை
நான் ?

காலம் முழுவதும்
அவளை நினைத்து கொண்டே
மண்ணுக்குள் மறைவேனே தவிர
என் மனதில் இருந்து ஒருபோதும்
அவளை நீக்க மாட்டேன் .

ஆ.சி. அன்னை ப்ரியன் மணிகண்டன்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (26-Oct-16, 5:49 pm)
பார்வை : 532

மேலே