விலகி நீயும் செல்லாதே

விலகி நீயும் செல்லாதே....

இமை மூடா இரவுகளில் என் உள்ளம்
தொட்டுச்செல்லாதே....
இமை மூடிய என் விழிகளுக்குள் உன்
விழிகள் விட்டுச்செல்லாதே...
வழி தேடும் என் பார்வைகளை
என் கள்வா நீயும் தீண்டாதே....

மொழியில்லா என் மௌனத்தை
உன் இதழால் நீயும் கலைக்காதே...
உன் மடி சாயும் என் பெண்மையை
உன் கரத்தால் நீயும் அணைக்காதே....
என் இதயம் எங்கிலும் உன்
சுவாசம் வீச மறக்காதே...

குழியில்லா என் கன்னத்தை உன்
உதட்டால் பள்ளம் ஆக்காதே...
தந்தியில்லா என் இடையிலே
விரலால் வித்தைகள் காட்டாதே...
உன் கால்த்தடம் சேரும் தருணத்தில்
உன் நிழலாய் ஏற்றிட மறுக்காதே...

உன் உயிரோடு உறவாடத்துடிக்கும் .
என்னை தென்றலாய் நீயும் தீண்டாதே...
உன் காலடி சேர்ந்திட தவிக்கின்ற
என்னை விலகி நீயும் செல்லாதே....

எழுதியவர் : அன்புடன் சகி (28-Oct-16, 6:07 pm)
பார்வை : 579

மேலே