தீபாவளி கொண்டாட்டம்

வருடம் முழுவதும்
உடல் உருக
உழைத்து .

தனக்கென்று இல்லாமல்
தன் மனைவி மக்களுக்காக
புத்தாடை எடுத்து
வண்ணமயம் பூண்டு
சொந்த உறவின் களிப்பில்
மகிழ்ப்பவனே ....!

உனக்கல்ல ...

நீ நாள்தோறும் ..
நாற்றங்கால் நாணல்களை
விதைத்து மக்களுக்காக
நெல்மணிகளை கொடுத்து
பசியினை போக்கும் .

விவசாயிக்கல்ல ..

உழைத்து களைத்து
ஓய்ந்து திரட்டிய
காசுகளையெல்லாம்
கரி ஆக்கும் .

இந்நாளில்
வரவு உண்டோ ...!

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (29-Oct-16, 4:52 am)
பார்வை : 219

மேலே