அப்பாவி காதல்
வெறுப்பது நீயென
தெரிந்தும்
வெகுளித்தனமாய்
காதல் உன்மேல்...
ஒதுக்கிவைக்கும்
எண்ணம்கொண்டவளே,
ஓரப்பார்வையில் – எனை
ஈர்ப்பதேனோ!!!
முடித்துக்கொள்ளும்
துணிவிருந்தும்
மடிந்துபோக
மனமில்லை – உன்
கள்ளச்சிரிப்பும்,
சாடை வார்த்தைகளும்
எனைச்சேரவோ???