மழையெங்கே

வெதச்சுப் போட்டு நெல்லு சொச்சோ ஒடைக்கத்தாம் பாக்குதே.....
மொளச்ச வந்த பச்சை இங்க பழுக்கத்தாம் பாக்குதே......
கருப்ப பாக்க கழுத்த தூக்கி
கண்ணு ரெண்டும் வலிச்சுப் போச்சு......
கம்மாக்கரப் புல்லுங் கூட
நெறத்த மாத்தி சலிச்சுப் போச்சு....
வானத்த நம்பி வேளாரு கூட்டம்
மேகத்துக்கேனோ நம்மமேல காட்டம்.
எட்டி எட்டி பாக்குற மேகம்
எறங்காமத்தா போதே யேனோ
கொட்டிப் போட்ட காசெடுக்க
கொடுப்பனயே இல்ல தானோ.....😰😰😰

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (31-Oct-16, 7:42 pm)
பார்வை : 1163

மேலே