ஒளித்துளியின் கண்ணீர்த்துளி

மௌனித்தது
திசை தவறி
ஆழ ஓடிய இருள் .

எழுகிறது
அதன் நிழல் ஒவ்வொன்றிலும்
வெறும் பதிலற்ற ஏன்?

உழன்று ... உருகி
தன்னைத் தானே விழுங்கி
கருமை படர்கிறது அதன் முகம் .

சுருங்கி
சுவடு பிறழ்ந்து
இறுகி உதிர்கிறது
அதன் உதடுகளிலிருந்து
மறையும் புன்னகை .

பதுங்கி
மொக்கு விரிக்கும்
மலரின் சிலிர்ப்பில்
முதிர்கிறது உள்ளீடாய்
அறியாத பீதியின் பயங்கரம் .

தளர்ந்த உதயத்தில்
தசை மினுக்கும் பூக்களில்
தெரியக்கூடும் ...

நேற்று தொலைந்த
மௌனத்தின்
திசை தவறிய
ஒரு ஒளித்துளியின்

கண்ணீர்த்துளி .

எழுதியவர் : rameshalam (2-Nov-16, 8:14 am)
பார்வை : 100

மேலே