வான் தேசத்து இளவரசி - மழை

வான் தேசத்து இளவரசி
பூமிக்கு வருகிறாள்!

ஊரெங்கும் தோரணமாய்
வானவில்லும் வந்தது!

அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளாய்
மின்னல் மின்னியது!

வேட்டு சத்தமாய் விண்ணை பிளந்து
இடியும் இடித்தது !

அவள் வந்து போன பின்னே
அவணியெங்கும்
ஆனந்த தாண்டவம்...

எழுதியவர் : தங்கமணிகண்டன் (2-Nov-16, 11:50 am)
பார்வை : 1333

மேலே