மிதந்து வரும் கவிதை

மின்னல்கள்
நிகழும் வெளி மீது
வளர்கின்றன
ஒரு கவிதையின் நட்சத்திரங்கள் .

ஒளியின் பிரதி
மேக நீர்ப்படலத்தின்
சிற்றலைகளில்
சிறு கனவுகளாகி மிதக்கிறது .

தூதாகும்
பறவையொன்றின் தாலாட்டில்
நினைவுகளின் விளிம்பில்
வருடுகிறது தொடுவானம் .

துயிலின் இசையில்
இமை ஊற்றின் ஆழத்தில்
கனவின் குமிழ்கள்
கண்களாகி விட ......

தானே மிதந்த கரு
இதயம் வருடி
உடைந்து சொரிகிறது
எழுத்துக்களாய் ....

இந்தக் காகிதத்தில் ..

எழுதியவர் : rameshalam (2-Nov-16, 8:56 pm)
பார்வை : 116

மேலே