ஒரு பக்கக் காதல் கதை பாகம் -12

அடுத்த நாள் காலை அவளை கண்டு திகைத்த நிலையில் அவளின் பெற்றோர்கள்!!

அவள் தாய்: என்ன காரியம்டி பண்ணிவெச்சுருக்க ?

அவள்: எனக்கு ரெகார்டிங் போக நேரமாச்சு, வரேன்

விருட்டென பறந்தது பஜாஜ் ...வழியில் பார்ப்பவர்கள் வித்தியாசமாய் தெரிந்தார்கள் ..அவளை நோக்கும் கண்களின் சதவிகிதம் பாதியாய் குறைந்தது ..உலகமே அவளுக்கு வித்தியாசப்பட்டு போனதைப்போல் உணர்ந்தாள்

அவன்: அவளை கண்டு நகைத்தான் ..நேத்து நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்

அவள்: பெண்களே உங்களுக்கு விளையாட்டு தானே, உங்களோட விளையாடும் கருவியா இருக்க என்னால முடியாதுன்னு இப்போ உனக்கு நல்லா புரிஞ்சுருக்கும்ல

அவன்: அதெல்லாம் சரிதான்..உன்ன இதுக்கப்புறம் பாக்குறதுல நேரத்த செலவுபண்றதுக்கு லயோலா பக்கம் போறேன்..அங்கயாவது அழகான பொண்ணுங்க இருப்பாங்க..

அவள்: இது தெரிஞ்சுருந்தா முன்னாடியே இப்படி செய்துருப்பேன்..உங்களோட காம பார்வைல தப்பிச்ச விதிவிலக்கா இருக்குறதுல எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி..போங்க போயி சிகை அலங்கார அழகிகளையும், உடல் வடிவ உசுப்பல்களையும் தொரத்துங்க ...

அவன்: அதுதானே ஆம்பள ..என கூறி தன இடது கையினை நெற்றிமேல் வைத்து குட்பை சொன்னான்

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (15-Nov-16, 11:41 am)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 339

மேலே