உன் அழகால் அடிமை -- முஹம்மத் ஸர்பான்

என்னுடைய 300 வது படைப்பு

கனவின் நதியில்
மனதை திருடும்
உள்ளூர் அழகி
மஞ்சத் தாமரை
குளத்தில்
பூக்கள் பறிக்கிறாள்

ஆட்டுக் குட்டியாக
பிறந்திருந்தால்
உன் மாராப்பில்
சில வினாடிகள்
வாழ்ந்திருப்பேன்

கவிதை
போட்டியில்
நீ எழுதிய
கவிதைகள்
பூக்களாகிறது

நிலவிற்கும்
பைத்தியம்
பிடிக்கின்றது
உன் பட்டாம்
பூச்சி 'விழிகளால்'

நான் உந்தன்
ரசிகனில்லை
மன்னித்து விடு
நான் உந்தன்
ரசனையாகவே
இருக்கிறேன்

பிரபஞ்சம்
முழுவதையும்
சிறை பிடிப்பேன்
உன் பாதத்தை
தீண்டிய முள்ளை
தண்டிப்பதற்காக

பாடல் எழுதும்
கனவெல்லாம்
ஏமாற்றியது
தொலைந்த
என்னையும் என்
கவிதைகளையும்
நீயே ஒரு தாயாக
மீட்டுத் தருகிறாய்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Nov-16, 10:47 am)
பார்வை : 266

மேலே