சமநிலை

நாடெங்கும் மக்களிடையே
அமைதி கலந்த புழுக்கம்
அமுக்கம் ஏக்கம் வெறுமை
ஏன்/ ஏன்/ ஏன் /
உள்ளவன் போச்சு என்கிறான்
இல்லாதவன் பெருமூச்சு விடுகின்றான்
நம்ப முடியவில்லை
நாட்டில் சம நிலை இவ்வளவு
சீக்கிரம் சிக்கி விடுவதை ,

மனிதன் மனிதனுக்காக
வாழ வேண்டும், அதுவே மனிதம்
மனிதம் மனிதர்களிடையே
தோன்ற இதுவும் நல்ல வழியே
பணம் என்ன பணம் பணம்
வசதியுடன் வாழு, வாழ விடு
நன்மைகள் நிறைந்து மக்கள்
நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Nov-16, 10:54 am)
பார்வை : 114

மேலே