போர் வேண்டாம்---முஹம்மத் ஸர்பான்

பூக்களை தொட்ட
காற்றின் மேல் கோபமா
குளத்தில் நீந்தும்
தங்க மீன்களின் தாகமா
பொறாமை கொண்ட
வானவில்லின் சாபமா
ரோஜாக்கள் தோட்டம்
உதிர்ந்ததன் ஏக்கமா
பட்டை மரத்தில்
சோக முகம் கொண்டு
நீ சாய்ந்ததன் காரணம்
சொல்லிவிடு அன்பே!
நாளைய நூற்றாண்டு
படிக்கும் வரலாற்றில்
உன் மெளனம்
கவிஞர்கள் தேசத்தில்
போர் ஒப்பந்தங்களை
கைச்சாத்தி விடக்கூடாது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Nov-16, 9:12 am)
பார்வை : 249

மேலே