முருகன் துதி

முருகா மால் மருகா
என்று ஒருகால் அழைத்தாலே
வேலவன் அவன் வேல்
வந்து நம்மைக் காத்திடும்
நம் வினைகள் எல்லாம் போக்கிடும்
அவன் சேவற்கொடி வந்து
நம் வாழ்வில் வெற்றிகள் சேர்ந்திடும்
பக்தியோடு வேலவனைத் துதித்திட
மாமயில் ஏறி விரைவாய் வந்திடுவான்
நமக்கு காட்சிதருவான்
இக பர இன்பங்கள் எல்லாம் தந்திடுவான்
முருகா என்றும் உன் வேல் போற்றி
உந்தன் சேவற்கொடி போற்றி
மயில் போற்றி
போற்றி போற்றி வேலவா போற்றி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-16, 5:23 am)
பார்வை : 277

மேலே