திருமண வாழ்த்து

வாசலில்வாழை மரம்
வரவேற்க....
வந்தோரை பன்னீரால்
இளசுகள் குளிப்பாட்ட..
சர சரக்கும்தோரணங்கள்
தாளமிட...
ஊர்கூடி அழைத்திருந்த‌
உற்றாரும்..உறவுகளும்
சூழ்ந்து..அட்சதையால்
ஆசி வழங்க...

மஞ்சள் குங்குமத்தோடு
புதுத்தாலி.. நெஞ்சில் குடியேற..

இருமணமும்
ஒரு மணமாகி
இல்லறம் என்னும்
நல்லறம்..மணக்க...

வாழ்வாங்கு வாழ்க மணமக்கள்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (23-Nov-16, 3:39 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 93

மேலே