சிக்கி தவிக்குதடி என் இதயம் 555

பெண்ணே...

உன் கண்களை பார்க்க
சொன்னாய் பார்த்தேன்...

சிறி என்றாய்
உன்னுடன் சிரித்தேன்...

சேர் என்றாய்
உன்னுடன் என் கைசேர்ந்தேன்...

நீ பார்த்தாய்
உன்னிடம் பணிந்தேன்...

நீ சிரித்தாய்
உன்னிடம் சிலிர்த்தேன்...

என்னை தொட்டாய்
உன்னை தொடர்ந்தேன்...

தோள் சேர்ந்தாய்
நான் சிதைந்தேன்...

மணம் என்றாய்
நீ என்னை மறந்தாய்...

சிக்கி தவிக்குதடி
என் இதயம்...

சிலந்தி வலையில்
சிக்கிய புழுவாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Nov-16, 7:50 pm)
பார்வை : 1613

மேலே