கனவொன்றும் வரக்கூடாதெனக்கு

கனவொன்றும் வரக்கூடாது...
தினமென்னை சீராட்டியவள்
மகனுக்காக மரணத்தை
பார்த்துவிட்டுவந்த பாவை
கனவிலே கண்முன்னே
காலன் கொண்டுசெல்வதுபோல்
கனவொன்றும் வரக்கூடாது...
ஏனெனில்
கனவு வந்த
கணமே என்னுயிரை
காலன் கொண்டுசெல்வான்
என்னுயிர் பிரிந்தது
என்னன்னைக்கு தெரிந்தால்
செத்து போகமாட்டாள்
பித்தாகி விடுவாள்
அந்த அவலநிலைமையென்
அன்னைக்கு வரக்கூடாது
கடவுளே
கனவொன்றுமெனக்கு வரக்கூடாது ...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (28-Nov-16, 3:30 pm)
பார்வை : 337

மேலே