நிமிர்ந்து நில் மனிதனாய்

கார்மேகம் குடை சூழ்ந்தாலும்
சூரியன் அழிவதில்லை
என் மதமோ உன் இனமோ
பிரிவுக்கு குறைகளில்லை
அன்பை யார் போதித்தாலும்
போர்கள் தீர்வதில்லை ..

நல்லாட்சி நாளை வருமெனும்
கனவிற்கு பஞ்சமில்லை
கார்மேகம் அழியும் நாள் அது
மிக மிக தொலைவில் இல்லை ..

இல்லை என்று சொல்லடா
முதலாளித்துவ வியாபாரி
உன்னையும் என்னையும்
பலரையும் கொண்டு உண்பான்,

வேண்டாமென எதிர்த்து நில்
நம் தலைமுறைகள் வாழட்டும்
உன் உடம்போ என் உடம்போ
உள்ளோடும் இரத்தம் ஒரே நிறம்
என நிமிர்ந்து நில் மனிதனாய் .

எழுதியவர் : சங்கராத்மஜன் திருவாதவூரன (1-Dec-16, 5:41 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 833

மேலே