அம்மா என்னும் மந்திரம்
ஆலமரம் இன்று அடியோடு சாய்ந்தது..
சேலகட்டிய சிங்கம் தனியா தூங்குது.
மாலை மரியாதை எல்லாம் நடக்குது.
காலகொடுமை இங்கே அரங்கேற வலிக்குது.
ஆதிக்க ஆண்களின் நடுவிலே வாழ்ந்தாய்.
பாதியில் எங்களை விட்டு விண்ணை சேர்ந்தாய்.
வாடிடும் பெண்களுக்கு வழிகாட்டி நீயே..
தேடிவருவோரை வாழ வச்ச தாயே.
கலைஞர் மீதுநான் பேரன்பு கொண்டவள்.
தலைவியே எனக்கு நீ வழிகாட்டி ஆனவள்..