நினைவு அஞ்சலி

நினைவு அஞ்சலி

அம்மா என்று அன்போடு மக்கள் அழைத்த
அருமை செல்வி அமைதியோடு உறங்கிட
தரணியெல்லாம் வாழும் தமிழர்கள் துயரம் எய்திட
காண்போரின் கண்கள் கலங்கி காலனை சாடிட
காட்சியில் வைத்தக் கண்ணாடி பெட்டகம் கண்ணீரில் மூழ்கிட
வந்த துயர் யாவையும் தன் மனஉறுதியால் சந்தித்து
வலிமையையும் வாக்கு சாதுர்யத்தாலும் எதிர்ப்புக்களை வென்று
வளரும் சந்ததியருக்கு ஒரு வழிகாட்டியாய்
இரும்பு மகள் என்று பெயர் கொண்டு எல்லோரையும் கவர்ந்த
அம்மா மூவர்ண கொடியினால் முழுதும் மூடப் பெற்று
மீளாத துயில் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு
இந்நாளிலே தமிழ் மக்கள் நாம் யாவரும்
மனதினால் நினைவுஅஞ்சலி செலுத்திடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (7-Dec-16, 2:57 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : ninaivu anjali
பார்வை : 283

மேலே