நீ எங்கிருக்கிறாய் அன்பே
என் வாழ்வில் தெய்வகானமாய் வந்தென்னை உயிர்பித்தவளே!
நீ எங்கிருக்கிறாய் அன்பே?..
உன்னை காணவே நாளும் கண்களிரண்டும் துடிக்கிறதன்பே!...
அறிவு கூர்மையாலென்னை வென்றவளே!...
மாணவனென்னை கவிஞனாக்கியவளே...
நீ எங்கிருக்கிறாய் அன்பே??...
நீ தான் சுவாசமென்றாய்.
பிறகு ஏன் என்னை நீங்கிச் சென்றாய்??...
என் வாழ்வின் விடிவெள்ளியாய் இருந்தவளே!...
என் வாழ்வின் விடியலுக்கானவளே!...
நீ எங்கிருக்கிறாய் அன்பே???...
உனக்காகவே காத்திருக்கிறேனன்பே..
கடைசி வரை காத்திருப்பேனன்பே,
என் வாழ்வு முடிவுறும் கடைசி தருணத்திலாவது என்னைக் காண வருவாயென்ற நம்பிக்கையில்.....