நீ இல்லாத நான்

நீ இல்லாத நான் தனிமரமானேன்..
படைசூழ நண்பர்கள் இல்லை..
உற்றார் உறவினர் சுற்றமென்றுரைக்க யாருமில்லை...
என் சோகமெல்லாம் தலைதூக்கும் உன் நினைவுகளிலே ஆறுதலடைகிறேன்..

உன் நினைவுகளே என் பொக்கிஷமடி...
நீ என்னருகில் இல்லாவிடிலும் நித்தமொரு படிப்பினையை உன் நினைவுகளிலேயே காண்கிறேனடி...

தனியாளாய் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தவனாய் இருக்கிறேனடி உன் நினைவுகளாலேயே...

சாதிக்க வேண்டுமென்ற உத்வேகம் என்னுள் உதயமாகியதற்கு காரணமே உன் நினைவுகள் தானடி என் செல்லமே...

என்னைவிட்டு நீ நெடுந்தொலைவில் இருந்தாலும் என் தைரியம் நீயாவாய்...
என் சிந்தனை ஊற்றின் ஆதாரமே நீ தானே...
உன்னை மறந்தால் நானேதடி...
உண்மையை மறுத்தால் நான் மனிதனில்லையடி...
நாளும் உன் நினைவுகளுடன் நான் வாழ,
மற்ற மனித துணை எனக்கெதுக்கடி???....

என் கவலையெல்லாம் என்னவென்றால்,
நான் இல்லாத நீ சந்தோஷமாக வாழ்கிறாயா? என்பதே...
உன்னை காண வரலாமென்றே நினைப்பேன்...
ஆனால், நீ என்னைக் கண்டுத் துயருற்றால் அதைக் காண என்னால் இயலாதடி....

கடைசிவரை உன் நினைவுகளுடன் மட்டுமே வாழ்வேனடி..
உன்னை எண்ணிய மனதில் வேறு பெண்ணிற்கு இடமில்லையடி....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Dec-16, 3:30 pm)
Tanglish : nee illatha naan
பார்வை : 3241

மேலே