உயிரும் மெய்யும் சேர்ந்துன்னை பாடுதடி

கண்மணியே உன்னை பற்றி எழுத
காகிதங்கள் எடுத்துதேனடி
கிறுக்கல்கள் போதாது என் காதலை சொல்ல
கீர்த்தனைகள் வடிக்கும் பக்தனாய் ஆவேனடி
குருவியாய் நீயும் பறந்து இங்கு வந்தால்
கூடாய் நான் இருப்பேனடி
கெடுபிடி ஏதும் உன்னிடத்தில் இல்லை
கேட்டது அனைத்தையும் தருவேனடி
கை பிடித்து நடந்திடும் வரம் மட்டும் தந்தால்
கொண்டவனாய் நான் இருந்து கிடப்பேன்
கோலமயிலே உன் காவலனாக.......!!!!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (10-Dec-16, 10:00 am)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 248

மேலே