காதலின் சாபம்
என் உயிர் பிரிந்து போகுதே
என் மனம் பிரிவில் வாடுதே
உயிர் நீங்கி போகும் காதலி...
மனம் நொருங்கி போகுது என்னடி
தனியே எனை தவிக்க விட்டு
போவது ஏனடி??
சாவித்ரி அன்று எமனிடம் பெற்ற
பாக்கியம் வேண்டும்
சாவினில் நான் உன்னை மீட்க
என்னுயிர் போதும்!
என்னுடன் நீ வாழ்வாய் என்றால்
நொடிகள் போதும்
அந்நொடி என்னுயிரும் மகிழ்வாய்
பிரிந்தே போகும்....
காதல் சொல்லாமல்
லீலை செய்தவள் -நம்
காதல் சேராமல்
சொர்க்கம் போகுதே...
சாடை கண்ணாலே
காதல் சொன்னவள்
வாடை காற்றாலே நம்
காதல் முறிந்ததே....