மனைவி

உன் தோளுக்கு மாலையிட்டேன்
என் கோல்கள் மாறியது...
உன் நெற்றிக்கு பொட்டு வைத்தேன்
என் இன்னல்கள் பட்டுப்போனது...
உன் விரலோடு விரல் கோர்த்தேன்
என் நெஞ்சில் இன்பங்கள் குடியேறியது...

என் கண்ணில் தூசு என்றால்
உன் கண்கள் கலங்கியது...
நான் பேசும் பேச்சில் உன் பெயர்
எதிரொலித்தது...
நான் பார்த்த காட்சிகளில் உன் பிம்பம் பிரதிபலித்தது...

உன்மடியில் தலைவைத்து
சொர்க்கத்தை நான் கண்டேன்...
என் மார்பில் நீ சாய
உலகத்தை நான் மறந்தேன்...
இன்னும் நூறாண்டு உயிர்வாழ
இறைவனிடம் வரம் கேட்டேன்...

உன் தொப்புள்கொடியில்
என் வீட்டில் தொட்டில் கட்டினாய்
இரு மழலைகளோடு கொஞ்சிப்பேச
எனக்கு வரமளித்தாய்...
உன் தேவையை நான் அறியும் முன்பே
என் தேவையை நீ அறிந்தாய்...
இதுதான் மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் போலும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (14-Dec-16, 10:39 am)
Tanglish : manaivi
பார்வை : 121

மேலே