என் காதல் கதை

........ஹல்லோ இது என் சொந்த கவிதை.........


மீ காதலிக்கு இந்த லைன் நல்லாருக்கா சொல்லுங்க
....
என்னவளே இந்த உலகத்தில்
நீ எங்கே இருந்தாலும் சரி
உன் கால் கொலுசொலி
கேட்க்கும் தூரத்தில் தான் என் காது இருக்கும்
உன்னை கைபிடிக்கதான் என் கரம் காத்திருக்கும்
.
.
அன்பே நீ எப்படி இருந்தாலும் சரி
என் இதயம் உனக்காக மட்டுமே தவம் இருக்கும்
நீ இல்ல வாழ்க்கையே வேண்டாம் என்று அது வெறுக்கும்
.
நீ கருப்பாக இருந்தாலும் என் காதல் கறுப்பாகுது
நீ ஏழையாக இருந்தாலும் என் அன்பு கொஞ்சம் கூட குறையாது

.
நீ நெருப்பாக இருந்தாலும்
உன்னை அடையாமல் என் உயிர் கட்டை வேகாது
நீ நீராக இருந்தாலும் உன்னை அருந்தாமல்
என் தாகம் தீராது
.
உயிர் இருக்கும் வரை
உன்னை நேசிப்பேன்
உயிர் இழந்து பின்பும் கூட
கடவுளிடம் கையேந்தி மீண்டும்
உனக்காக உயிர் கொள்வேன்
..
அழகு என்றால் உன் பெயர் சொல்வேன்
அன்பு என்றால் நம் காதலை சொல்வேன்.

....
ஐ லவ் யு டி செல்லம் உம்ம்ம்மா

எழுதியவர் : திருச்சி பிரவீன் lyrics (15-Dec-16, 7:10 am)
Tanglish : en kaadhal kathai
பார்வை : 438

மேலே