காதலின் வலி
கண்கள் கண்ட காட்சிகளெல்லாம்
காதல் என்று சொல்வதா
கண்ணீர் நீரை வரவழைக்க
அன்று காதல் வந்ததா
கடலிலே கரையும் உப்பாய் நானும்
காதலில் கரைகிறேன்
காதலே எனை வேண்டாமென்ற
நொடியிலே இறக்கிறேன்
கனவிலே உனை காணும்போது
வானிலே பறக்கிறேன்
நினைவிலே நீ நீங்கும்போது
உயிரையும் துறக்கிறேன்
முத்தெடுத்த சிப்பியாய் நான்
செத்துப் போகிறேன் அன்பே
என் காதலை என்னில் நீ
பறித்துச் சென்ற பின்பே
யுத்தமொன்று நடக்கும் காதல்
தொடங்கும் முன்பே அன்பே
உனை மட்டும் நினைப்பேன்
மண்ணில் வாழும் வரையில் அன்பே
காதலைச் சொல்ல வருகிறேன்
காற்றிலே கரைந்து செல்கிறாய்
இதயத்தைக் கொடுக்க வருகிறேன்
உயிருடன் கொல்கிறாய்