சொன்னா எவன்பா கேட்கிறான்

பெண் பார்ப்பது...?
.
.
ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...
எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...
.
.
*அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
.
*அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,
.
*உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,
.
*குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,
.
*பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,
.
*மெலிந்தவளை முடிக்காதே! வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்,
.
*வெள்ளையானவளை முடிக்காதே! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்,
.
*கருத்தவளை முடிக்காதே! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்,
.
*படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள்,
.
*படித்தவளை முடிக்காதே! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்,
.
*பணக்காரியை முடிக்காதே! உனக்கு அந்த இடத்தில் மரியாதை இருக்காது,
.
*ஏழையை முடிக்காதே! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகளும் சிரமப்படும்,
.
*அதிக அன்பானவளை முடிக்காதே! நீ வாழவும் இயலாது சாகவும் இயலாது,
.
*கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகிவிடும்,
.
*அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உன் மீது சந்தேகம் கொள்வாள்,
.
*ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்,
.
*அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள்,
.
*பரபரப்பானவளை முடிக்காதே! நீ சொல்வது அவள் காதில் விழாது,
.
*ஊருக்குள்ளே பார்த்து முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள்,
.
*தூரத்தில் பார்த்தும் முடிக்காதே! அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்,
.
என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குருநாதர்...
.
.
இதை கேட்ட அந்த வாலிபன் கடுமையான கோபத்தோடு சொல்கிறான்...
.
"ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே வேண்டாம்!" என்று சொல்லிவிடுங்களேன்..
.
குரு மென்மையான ஒரு சிரிப்புடன் சொல்கிறார்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"சொன்னா எவன்பா! கேட்கிறான்!"

எழுதியவர் : செல்வமணி (16-Dec-16, 8:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 339

மேலே