இன்னொரு மனிதன் வாழும் வரை யாருமே இங்கு அநாதை இல்லை
வாழ்வது ஒரு வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருங்கள்....
எல்லோரையும் மகிழ்ச்சியாக்குங்கள்
******************************************
என் வலியை சொல்லவும் யாரும் இல்லை.....
கேட்கவும் ஆள் இல்லை.....
நான் ஒரு அநாதை.........
என் வாழ்க்கை தான் சோகம்
என்னை சுற்றி இருப்பவர்களை
சோகத்தில் ஆற்றுவேனா.....
எப்பொழுதும் சிரிக்க வைப்பேன்.....
கண்ணீரை மறைத்துவிட்டு
எல்லோர் வலியையும்
நான் கேட்பேன்.....
காரணம்
நான்
இன்னும் உயிரோடு தானே இருக்கிறேன்.......
சோகத்தை துடைத்தெறி.....
மகிழ்ச்சியை ஏற்று
வானத்தில் ஏறு.....
உலகில் இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
யாரும் இங்கு
அநாதை இல்லை......
அன்பை எதிர்பார்க்காதே......
அன்பை பகிரு.......
உலகம் உருண்டை தான்......
நாணயமான அன்பும் உன்னிடம் வந்து சேரும்.......
எல்லைக் கோடுகள்
மொழிகள் இல்லாமல்
வெறி ஏதும் இல்லாமல்
மனிதத்தோடு நடந்துக் கொள்ளுங்கள்.....
மனிதமே அன்பு.......
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்......
~ பிரபாவதி வீரமுத்து