மனிதம்
உணர்வுகளை மதியுங்களேன்.....
அதை ஏன் கொச்சை படுத்துகிறீர்கள்....
வியாபாரம் ஆக்குகிறீர்கள்......
தாய்ப்பாலை விலை பேசும் நாயாடா நீ.....
மனிதன் என்றால் மனிதம் வேண்டும்.....
இன்றைய காலகட்டத்தில்
உணர்வுகளை விற்பது தான் வியாபாரமாகி உள்ளது.....
கொஞ்சம் கூட மனசாட்சி என்பதே இல்லா மிருகங்கள்.......
மனிதன் என்றால்
ஒரு வரையறை
வரைமுறை வேண்டும்
அது எல்லாம் இல்லை என்றால்
அவன் மனிதனே இல்லை....
ஊடகங்களே.....
சமூக வலை தளங்களே....
யாகாவராயினும் நா காக்க வேண்டும்.....
மனிதன் என்றால் பண்பு வேண்டும்
பாசம் வேண்டும்
நேசம் வேண்டும்
அக்கறை வேண்டும்
அடுத்தவர் கண்ணீரை துடைக்க வேண்டும்....
அடுத்தவர் கண்ணீரை விற்று வியாபாரம் செய்யக் கூடாது......
மனிதனாக வாழ்ந்து தான் பாருங்களேன்.....