தனிமை

...........................
இதுவரை என்னை தாக்கியது எதுவுமில்லை
அந்த மழலை அழுகுரலை விட....

செப்பனிட்ட வார்த்தைகளில்தான்
நான் சாய்ந்து கிடந்தேன்
என்பதை மறுபடியும் நினைக்க
மறுக்கிறது மனசு...

தாகம் தீர்க்க தாளில் கிடைக்கும்
மலை நீராயினும் -
பெரிது அவர்களுக்கு...

ஆயிரம் முறை செதுக்கியும்
சிதைந்து போகவில்லை
நொந்து போன மனசு

இப்போதெல்லாம் கதைப்பதற்கு -
யாருமில்லை தனிமையைத்தவிர....
............

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (18-Dec-16, 9:13 pm)
Tanglish : thanimai
பார்வை : 1214

மேலே