சொல்லாமல் சொன்ன காதல் -கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு

சொல்லாமல் சொன்ன காதல்
(கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு)


ஆதியும், அந்தமும் இல்லா
மானுட பிறப்பில் !
தனியாத தாகத்தில்
விக்கி தவித்தேன் – அவளின் பிரிவால்.
இன்னொரு
பிறவி - என்றொன்று,
உண்டெனில்……..
அவள் காதலன் - என்ற உறவுக்காக.
மீண்டும்
காத்திருபேன்.

உதிர்ந்த
பூ
காம்பை சேருமா ?

என் காதல் வானத்தில்
தேய்ந்த
நிலவு
பெளர்ணமியாகதா ? – என்ற
தனியாத தாகத்தில்
தவிக்கிறேன்………………..

அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கரைந்து …………
அவளின்
நினைவுகளோடு,
தெலைந்து போன- என் நாட்களை
கடந்த கால
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்
உயிர் ஊட்டுகிறது.

முற்றுப்பெறாத
அவளின் நினைவோடு…………
முற்றுப்பெற்ற
என் காதலோடு.
வாழாமல்
வாழ்கிறேன்.
இனைந்தும் இனையாமல்
நதியின் இருகரை - போல…


- அ.சி.மணி .
கூகையூர்

எழுதியவர் : அ.சி. மணி (20-Dec-16, 4:50 pm)
பார்வை : 302

மேலே