ஒரு தலைக் காதல்

மதம் கண்டு, சாதி கண்டு, நிறம் கண்டு, பணம் கண்டு, இனம் கண்டு காதல் செய்யும் காதலர்களெல்லாம் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வதில்லையே...

மனம் கொண்டு காதல் செய்யும் காதலர்களின் புகழ் கண்டு பூலோகம் வியக்குமே...

விருப்பமில்லா பெண்ணிடம் காதல் மொழிவதும்,
காம உணர்வோடும் காதல் செய்வதும் வீணென்றே என்றுதான் வீணர்களறிவாரோ??....

தனக்கொன்று என்றால் துடிதுடிக்க யாருமில்லை என்றாலும், தான் விரும்பிய மனதிற்கொன்று என்றால் துடிதுடித்தே துயருறும் மனதிலே உயர்ந்து நிற்கிறதே
ஒரு தலைக் காதல்...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனமோடு உறவு கலந்தால், கனநேரமும் மரணத்தைவிட மேலான துயரே பீடிக்குமே...

நெஞ்சில் நினைவலைகளைச் சுமந்து கனவுலகில் இன்னும் எத்தனை காலம் சிறகடிக்குமோ இந்த ஒரு தலைக் காதல்??...

உணர்வென்றாலே காமத்தையே முன் நிறுத்தும் காமுகரைக் கண்டாலே, ஒவ்வாமையால் வாந்தியுணர்வே மேலோங்கி நிற்கிறதே....

என்ன உலகமடா? என்ற வெறுப்புடன் ஒரு தலைக்காதலர்களுக்கு
இக்கவிதையொரு சமர்ப்பணம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Dec-16, 5:53 pm)
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 255

மேலே