என்ன விசித்திரமோ இது

இன்றையத் தொழில் நுட்பம்
இமயத்தைத் தொட்டது போல்
கொடிகட்டிப் பறந்தாலும்—புயல்
காற்றின் வேகம் போல்
களவாடப்படும்
மின்னஞ்சலின் முகவரியால்
முகம் வாடி
மனம் நிம்மதி இழக்காதோ!

பரந்து கிடக்கும் பூமியில்
விரிந்து பரவி கிடக்கும்
வளைத்தளங்கள் மூலம்
வேற்று மனிதர் ஒருவர்
நமது தகவல்களைத் திரட்டி
வங்கிப் பணத்தை எடுக்க
வழி உண்டு என்றால்—கள்வனைக்
காவலுக்கு வைத்ததுபோலாகாதோ!

அண்ட சராசரத்தையே
அடக்கி ஆள்வதுபோல்
இணையத்தையும், தொலைபேசியையும்
நம்பி கனவோடு வாழும்
நாம் அறியாமல் போனது
ஆடையணியாத மனிதர்போல்
வாழ்கிறோம் என்பதையன்றோ!

திறந்த புத்தகமாகக் கிடக்கும்
தனிமனித வாழ்க்கை,
தென்னைமர தேவாங்குபோல்
தன்னையே அறியாத மனிதன்,
அரசாங்கங்களோ
இறுகப்பூட்டிய கட்டிடத்திற்குள்
இயங்குவதாய் கூறிக்கொள்கின்றன,
என்ன விசித்திரமோ இது?

எழுதியவர் : கோ.கணபதி (24-Dec-16, 8:14 am)
பார்வை : 37

மேலே