அண்ணல் காந்தி இன்றில்லையே

அண்ணல் காந்தி இன்றில்லையே
அரசியல் நாடகத்தில் அரங்கேறும்
காட்சிகளைக் கண்டு மனம்
வெதும்ப!

நாளும் பல காட்சிகள்
நடப்பதெல்லாம்
புரியாத புதுக்கவி
ஆகிறது!

நல்லவர் யார் கெட்டவர் யார்
என்பதுவும்
நமக்கொன்றும் புரியாத புதிராகுது!

வாய்மையே வெல்லுமென்று
சொன்னதெல்லாம்
உபநிடத காலங்களில்
மெய்யாயிருக்கும்!

பொய்மையில் மிகச்சிறந்தோர்
ஒப்பனை பூண்டு
இளிச்சவாய் மக்களை
ஏமாற்றுகிறார்!

இதற்கும் பெயர் வைத்தார்
கலிகாலமென்று


நம்மில் பலர் அறிய பொய்மைகளை
தற்கால வரலாற்றில்
எழுதுகிறார்!

பேச்சுரிமை எழுத்துரிமை
இருந்தாலும்
ஏட்டளவில் சில சமயம் முடங்கிவிடும்?

முட்டாள்களின் ஆதரவு பெற்றவர்வர்களே
பேச்சுரிமை எழுத்துரிமை
பெற்றவர்கள்!

அறிவுடமை உள்ளவர்க்கு
இவ்வுலகு இல்லை;
பொருளீட்டும் கலையொன்றே
போதும் உமக்கு!

எழுதியவர் : மலர் (24-Dec-16, 10:58 pm)
பார்வை : 80

மேலே