பெற்றோருடன் பிள்ளையின் போர்
போதாத காலத்துல எங்கேயோ
போகுது பார் போரில் தோற்று...
பேரரசனாக வாழ்ந்த வீட்டில்
பெற்றெடுத்த பிள்ளைக்கு
பெண் பார்த்து மணமுடிக்க
பேரபிள்ளை பிறந்து வளர்ந்துருச்சு...
வந்தவள் பேச்சை ராஜா பிள்ளை கேற்க
புரியாத போர் நடப்பதை பேரன் பார்க்க
தோற்று தூரம்போக திண்ணையில்
அமர்ந்து எண்ணுது...
போகும்போது மகன்தானே
போகட்டும் விடுன்னு
மரத்தடி நிழலில் அமர்ந்து
மீண்டும் எங்கோ போகுது பார்
போரில் தோற்று..