மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் கவிஞர் இரா இரவி

மனிதநேய மாமணி பழனியப்பன்
வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !

நினைவுதினம் மட்டும்
நினைக்கப்படுபவன் அல்ல நீ !

நீங்காத நினைவை என்றும்
நெஞ்சில் தந்தவன் நீ !

ஈர இதயம் பெற்றவன் நீ !
ஆண் தெரசாவாக வாழ்ந்தவன் நீ !

பார்வையற்றோரின் பார்வையானாய் நீ !
பாரினில் உன்னத வாழ்வு வாழ்ந்தாய் நீ !

தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்தாய் நீ !
தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தினாய் நீ !

இறுதி மூச்சு வரை இயங்கியவன் நீ !
என்றும் பார்வையற்றோருக்காக வாழ்ந்தவன் நீ !

இரத்ததானம் தந்து முகாம் நடத்தியவன் நீ
விழிதானம் விழிப்புணர்வு விதைத்தவன் நீ !

பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல்
பிறந்தோம் உதவுவோம் என்று வாழ்ந்தவன் நீ !

பாதியில் பார்வை இழந்த போதும்
பார்வையற்றோர் வேடந்தாங்கல் நீ !

தான் பட்ட துன்பம் பார்வையற்றோர்
தான் படக் கூடாது என்று நீ !

தன் சொந்தப பணத்தில்
தன்னலமற்ற விடுதி தொடங்கினாய் !

மனிதநேய மாமணி பட்டத்தை
மருதமுத்து துணை வேந்தரிடம் பெற்றாய் !

மனதரில் மாணிக்கமாக வாழ்ந்து
மண்ணின் ஆளுநரிடம் விருது பெற்றாய் !

வருடா வருடம் இரத்ததான முகம் நடத்தியதற்கு
வளமான மதுரையின் ஆட்சித் தலைவர் விருது பெற்றாய் !

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய்
அடுத்தவர்களின் துயர் துடைத்து வாழ்ந்தாய் !

சராசரி வாழ்க்கை வாழாமல் நீ
சாதனை வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி தொடங்கி
அகவிழியோடு நடந்து கொண்டாய் நீ !

உன்னால் தொடங்கப்பட்ட விடுதி இன்றும்
உன் தம்பி கோபியால் இயங்கி வருகின்றது !

நீ வைத்த அகவிழி விடுதி விதை இன்று
நன்றாக விருட்சமாக வளர்ந்து வருகின்றது !

மதுரையின் பெருமைகளில் ஒன்றானது
மாமனிதன் நீ தொடங்கிய அகவிழி விடுதி !

மனிதநேயத்தின் சின்னமாக உள்ளது
மனிதநேயத்தை மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றது !

உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத சேவையால் வாழ்வாய் என்றும் நீ !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Dec-16, 4:15 pm)
பார்வை : 78

மேலே