படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மறக்கவில்லை அடைகாத்ததோடு
வளரும்வரை காக்கும்
தாய்க்கோழி !

கோழியின் நிழலில்
வளரும்வரை
பயமில்லை !

குஞ்சுகள் பசியாறுவதைப்
பார்த்துப்
பசியாறுகின்றது !

பறவைக்கு இனத்திலும்
உயர்ந்த உறவு
தாயே !

தன்னலமற்ற
தன்னிகரில்லா உறவு
தரணியில் தாய் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-Dec-16, 12:52 pm)
பார்வை : 111

மேலே