ஒரு ஆன்மாவின் காதல்-02

ஒரு ஆன்மாவின் காதல் (தொடர்ச்சி)

காலையில் மணி 6 இருக்கும் பவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தான். பின்னர் கதவை திறந்தான்.எழிலை பார்த்து அதிர்ந்தான்.என்னடா முகத்துல காயம் என்று கேட்டான். அது ஒண்ணும் இல்லடா என்று கூறிவிட்டு உனக்கு வேல எப்படிடா போதுனு கேட்டான்.பவனுக்கு கோவம் வந்துடிச்சி ஏன்டா மறைக்கற நேத்து உன் அறைக்கு நான் வந்தேன்.உள்ளே உன்னையும் பார்த்தேன் என்றான்.
என்னடா ஆச்சு உனக்கு என்று பொறுமை இல்லாமல் கத்தினான்.எழில் அமைதியாக நீ பார்த்தது உண்மை தான் என்றான்.என்னடா சொல்ற என்றான் பவன் பயத்துடன்.நான் மன்னிப்பு கேட்டது ஒரு ஆன்மாவிடம் என்றான்.என்னடா கதவிடறியா என்றான் பவன்.இல்லடா உண்மையா தான் சொல்றேன் அந்த ஆன்மா வேற யாரும் இல்லடா பிரியா தான் என்றான் எழில்.பவனுக்கு தூக்கி வாரி போட்டது. ஏனென்றால் பிரியாவும் எழிலும் 5 வருடமாக காதலித்தனர்.
3 வருடங்களுக்கு முன்பு பிரியா ஒரு விபத்தில் இறந்து விட்டாள். ஆனால்
என்று கூறி அமைதியான்.எழில் பேச ஆரம்பித்தான்.அவள் என்னோடு சேர்ந்து வாழ ஆசை படுகிறாள் நானும் அவளுடன் வாழ்ந்து கொண்டு
இருக்கேன் என்றான். நேத்து நீ பார்த்தது கூட அவள் செய்த வேலை தான் நேற்று லேட்டா வந்தேன் அப்படின்னு என்னை அந்தரத்தில் தொங்க விட்டு அடித்தாள் என்றான்.பவனுக்கு தலை சுற்றியது. என்ன இவன் பேயோடு வாழ போறேனு சொல்றான் என்று யோசித்தான். சரிடா நான் ஈவ்னிங் வந்து பேசறேன்.என்று சொல்லிவிட்டு கிளம்பினான் பவன்.அவனால் தன் நண்பனின் வாழ்க்கையை நினைத்து கவலை படுவதா சந்தோச படுவதானு தெரியல.நன்றாக ஒரு முடிவுக்கு வந்தான்.மறுநாள் காலை எழிலை அழைத்து கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றான்.நடந்த அனைத்தையும் சாமியாரிடம் கூறினான்.இவன் வாழ்நாள் முழுவதும் அந்த பேயோடு தான் வாழ வேண்டுமா? என்று கேட்டான்.அவர் பொறுமையாக ஒரு மந்திரத்தை கொடுத்து படிக்கும் படி கூறினார்.எழில் படிக்க படிக்க அவன் குரலோடு சேர்ந்து ஒரு பெண்ணின் குரலும் கேட்டது.ஆம் அது பிரியாவி்ன் குரல் தான்.அவர் பவனிடம் தம்பி இந்த பிறவியில் உன் நண்பனின் வாழ்க்கை இது தான்.அவர்களின் வாழ்க்கையை மாற்ற எந்த சக்தியும் இல்லை என்றார்.
( இன்றுவரை எழிலும் பிரியாவும் ஒன்றாக தான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.)
பிடித்தவர்கலோடு வாழ மரணம் ஒரு தடையல்ல.......முற்றும்
நன்றி.
அன்புடன்
இவண்

எழுதியவர் : இவண் (31-Dec-16, 11:45 pm)
சேர்த்தது : இவண்
பார்வை : 380

மேலே