வாழ்ந்தால் உன்னோடு
உன் நினைவால்
தூங்காத என் கண்களும்
ஏங்கிய நெஞ்சமும்
வாங்கிய என் உயிர்மூச்சும்
தேங்கிய என் ஆசைகளும்
அழுதழுது வீங்கிய என் முகமும்
உன்னை தவிர வேறு
ஆண்மகனை ஏற்க மறுக்கிறது..
உன்னோடு மணமேடையில்
இல்லையேல் என் உடல் பிணமேடையில்...
நான் இறந்தாலும்
என் இதயம் மறக்காது உன்னை...