விழிகளுக்குப் பரிசு

எனக்கு எந்த திறமையும் இல்லையென்று
நான் வருத்தப்படக் கூடாதென்று
படைக்கப்பட்டதுதானா உன் விழிகள்.

உன் விழிகளைத் தவிர்த்து நான்
விலகியே நடந்தாலும் என்
தமிழுக்கான இயல்களைத்
தவறாமல் தருகின்றன அவைகள்.

உந்தன் விழிகளால்
உந்தன் விழிகளுக்காகப் படைக்கப்பட்ட
இயல்களைத் தவிர என்னிடம்
வேறொன்றும் இல்லை உந்தன்
விழிகளுக்குத் நான் பரிசாய்த் தருவதற்கு…

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (3-Jan-17, 9:35 am)
பார்வை : 101

மேலே