என் மகன்
என் தூக்கத்தை தூக்கிச் சென்றவன்
அன்பால் என்னை முழுதாய் அள்ளிக் கொண்டவன்
கொஞ்சும் புன்னகையால் என் கோபத்தை கொளுத்தியவன்
குட்டி கையால் என்னை குழந்தையாக்கியவன்.
அவன் பொக்கை வாய் சிரிப்பில் சிதைந்து போகின்றேன் நான்
அவன் எட்டி உதைக்கையில் எண்ணிலா மகிழ்ச்சி அடைகிறேன் நான்
அவனை இறுக கட்டி இறுமாப்பு கொள்கிறேன் நான்
என்னால் பிறந்த அவன் நித்தம் கற்பிக்கின்றான் தினமும் புதிதாய் பிறக்க....