நான் எழுதும் யாவையும்
நான் விரும்புவதில்லை...
காரணம்
நான் கவிஞன் இல்லை
மனிதன்...

நான் சொல்வது மாத்திரம் தான்
சரி என்று வாதிடுவதில்லை
காரணம்
நான் சாமானிய மனிதன்...

நான் தவறே செய்ததில்லை
என்று பொய் சொல்லமாட்டேன்
ஏன் என்றால்
நான் நிறைய உயிர்களை கொன்றிருக்கிறேன்...

நான் யார் காலையும் பிடிக்க மாட்டேன்
எனக்கு கால்கள் உண்டு
நான் சொந்த காலில் நிற்பேன்...

நான் யாருக்கும்
நான் யார் என்பதை சொல்லத் தேவையில்லை (சொல்லியதில்லை)
வாழ்க்கையில் வாழ்ந்து விட்டு போகலாம்(மே)...

நான் என்ற நான்
வானுக்கும் பூமிக்கும்
இடையில் வாழும் பெண்...


சாதியும் அரசியலும் இல்லா உலகு வேண்டும்.....
இயற்கையும் இசையும் நிறைந்திருக்க வேண்டும்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Jan-17, 10:24 am)
Tanglish : q
பார்வை : 35

மேலே