ஒரு நாள் ஒரு பயணம்

இதயம் வருடும் இன்னிசை..!
இமை வருடும் தென்றல்..!
இடைவிடாத தூரல்....!!
என் தோள் நனைக்கும் சாரல்..!
தோள் சாயும் தோழி...!!
பூக்கள் பூக்கும் அந்தி மாலை....!
சுமைகள் எல்லாம் சுகமாய் கரைந்து கொண்டிருக்கும்
இந்த பயணம் எப்பொழுதும் தொடருமென்றால்..!!
இறைவனிடம் கேட்பேன்..
இன்னுமொரு ஜென்மம் தரச்சொல்லி..!!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Jan-17, 11:22 am)
பார்வை : 364

மேலே