இரவின் மகளே வருக

வான்வீதியில் உலவும் ஆதவன்
உமிழும் செங்கதிர் அனலின் இரவல்...

விண்மாடத்தில் மலரும் சந்திரன்
பொழியும் மந்திர குளிரின் ஊடல்...

மண்வெளி மானுடர் எந்திர உலகில்
சிதறிய சிந்தையின் தேடல்...

இந்திரலோகத்து ரம்பையின் அழகியல் மோகத்தை
தன்னிலும் அடக்கிய இரவு மங்கையே சீக்கிரம் வருக...

நட்சத்திர முத்துக்களைக் கொத்துக் கொத்தாக தைத்து
கரும்போர்வை கம்பளம் விரித்து இரவின் மகளே வருக வருக...

எழுதியவர் : ச.சதீஸ்குமார் (5-Jan-17, 3:53 pm)
பார்வை : 164

மேலே