அவளது திமிர் அழகு
அன்ன நடையில் திமிரில்லை
அவள் என்னைக் கண்டால் மட்டும்
திமிருடன் நடக்கிறாள்...
என்னை உன்னால் வெல்ல முடியுமா என்று
மறைமுகமாக சாவல்விடுவதை
பல முறை பார்த்திருக்கிறேன்...!
அவளது உடைகள்தான் வானவில் என்பேன்
ஆனால், அதை அவளிடம் மட்டும் சொல்லமுடியவில்லை
காரணம், அவள் அருகில் சென்றால்...
பார்வை தீயால் சுட்டெரிக்கிறாள்...
அதற்காக அழகை இரசிக்காமல் இருப்பேனா என்ன?
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் போது
இளம் காளையனைக் கண்ட கன்னி...
வெட்கி தலைசாய்த்தாள்...
வீரனிடம் நாணும் பெண்னென்று...
தேன் நிலவுக்கு பின்னே
திமிரை தொலைத்துவிட்டாள்...!