கனலாய் பார்வை ஆயினும் குளிர்கிறது

சூரியனில் நனைந்தாலும் வெண்ணிலவு சுடுவதில்லை,
அலை வந்து அடித்தாலும் கரையோ சத்தமிடுவதில்லை,
சுழலாக வந்தாலும் காற்றோடு மரங்கள் கோபம் கொண்டதில்லை,
வெள்ளம் தொட்ட ஆற்றோடு கடல் ஊடல் கொண்டதில்லை,
பெண்ணே உன் கனலாய் தகக்கும் விழிகள் என்னைமட்டும் சுடுவதேன்.
இயற்கைக்கும் பெண்மை உண்டு ஆனால்
உன் பெண்மையில் இன்னும் மென்மை வராதது ஏனோ?..
முறைக்கும் விழிகளோடு நீ கடக்கும் போது
செதில் செதிலாய் என் இதயம் சிதறித்தான் போனது,
பிழையறியேன் பெண்ணே ஆயினும் என் காதலில் குறையும் இல்லையடி.
விடியும் வரை யோசித்திடு நாளை உன் எதிரில் நிற்பேன் காதல் காரனாய்,
ஏற்றுக்கொண்டால் சாகும் வரை உன் துணை நான் நிற்பேன் காவல் காரனாய்.

எழுதியவர் : தமிழ் ப்ரியா (7-Jan-17, 12:08 am)
சேர்த்தது : தமிழ் ப்ரியா
பார்வை : 105

மேலே