நிறையா இல்லை குறையா

இறைவனின் படைப்பில்
உருவான இரண்டும்
உலகின் மாந்தருக்கு
ஒன்றுபோலத் தோன்றும்,
கிடைக்கும் பலன்—இரண்டுக்கும்
சரி சமமாயிருந்தாலும்
செயல்கள் வேறுபட்டிருக்கும்

முதலாவது,
ஊரில் பேரெடுத்திருந்தும்
யாரும் பார்த்ததில்லை—இது
அறிந்தவரை எப்போதும்
அச்சுறுத்தும்
நினைவை விட்டு பாதிப்பு
நீங்காது நீண்ட நாட்கள்

இரண்டாவது,
பேரெடுக்காத போதும்
ஊரே அறிந்திருக்கும்,
நன்றாக அழத்தெரியும்—அதுவும்
நினைத்தபோது அழமுடியும்
அதனால் தானோ அதற்கு
ஆயுளும் நீண்டிருக்கும்

பிறரை பயமுறுத்தி
சாதித்துக்கொள்ளும் பேயும்
எப்போதும் அழுதே
சாதித்துக்கொள்ளும் பெண்ணும்
ஒன்றுபோலத் தோன்றும்,
இறைவனின் படைப்பில்—இது
நிறையா இல்லை குறையா?

எழுதியவர் : கோ. கணபதி. (8-Jan-17, 9:05 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 39

மேலே