தணியா தனிமை தாகம்

சிறகாய் பறந்த மனம்
சருகாய் சரிந்த பின்னும்
மெழுகாய் உருகியதடி...!!

உன் நினைவாய் நெஞ்சில்
சேமித்த நாட்களும் வெறும்
கனவாய் காணாமல் போனதடி...!!

கூராய் உன் வேல்விழியும்
விறகாய் எனை வெட்டி
வீழ்த்தியதடி...!!

உனை சுகமாய் சுமக்கும்
இதயமும் பிரிவின் பாரம்
தாளாமல் தேம்பி நின்றதடி...!!

உயிரோடு உருண்டோடிய உதிரமும் உன் உறவை இழந்ததால் வேலைநிறுத்தம் கொண்டதடி...!!

குறிஞ்சிப்பூவாய் மலர்ந்த அன்பும் தனிமை வனத்தில் நெருஞ்சிமுள்ளாய் உயிரை
உறிஞ்சி குடிப்பதேனடி...!!

கிண்ணம் குழிந்த பல வண்ணம் குழைந்த கன்னக்குமிழ் சிவந்த சின்ன அன்னம் இவள் பெண்மையோ - உதிரம் விடுத்து உயிரை பருகுவதலே - மௌனம் களைத்து பவளவாய் மலர்ந்து ஓர் சொல் பேசடி...!!

தீயிலிட்டு தேகம் தீகின்றபோதும் தீருமோ இத்தனிமை தாகம் என் கண்ணிமையே பதில் கூறடி...!!

எழுதியவர் : ச.சதீஷ்குமார் (8-Jan-17, 11:34 am)
பார்வை : 226

மேலே