பா ட் டி
பத்து ரூவா காசு
பாவி நான்
பத்திரமா வச்சிருந்தேன் . . .
பாத்தவுக சொல்லுவீரோ
பாவிக்கு
பாத்தவுக சொல்லுவீரோ . . . .
பான்ட்ஸ் பவுடர் டப்பா
பாத்து நானும் ஓட்ட போட்டு
பக்குவமா வச்சுருந்தேன் . . . .
கொஞ்ச நாளாக் காணலியே
அஞ்சு நாளாத் தூங்கலியே . . . .
பரணுலயும் தேடிப்புட்டேன்
போன எடந் தோணலையே . . . .
பேத்தி கேக்கும் பஞ்சுமுட்டாய்
பாவி வாங்கிக் கொடுக்கலையே . . . .
பேரன்கூடக் கேக்கலியே
போடான்னு நான் சொல்லலியே . . . .
தனியாளா இந்த கட்ட
தடுமாறித் தவிக்கிறேனே . . . .
பொட்டு வச்ச மாமனுந்தான்
போனானே காட்டு வழி . . . . .
பெத்தெடுத்த புள்ளைகளும்
பார்க்க இன்னும் கூடலையே . . . . .
போனாப் போகுதுன்னு
புலம்பியழத் தெம்பில்லையே . . . . .
பாத்தவுகச் சொல்லுவீரோ
பத்து ரூவாச் சில்லறையும் . . . . . . . . . .
அன்புடன் பாட்டி