கனவோடு​ மட்டுமா

​நினைவில் நிலைத்தவை
அறிந்தே நிகழ்ந்தவை ​...
கனவில் வருபவை
கற்பனை கலந்தவை ...
உயிரான உறவுகள்
குருதியில் வந்தவை ...
உருவான உறவுகள்
உருவாக்கிக் கொண்டவை ..
தாயெனும் உறவு
கருவில் பிறந்தவை ....

உள்ளவரை தாயின் அன்பை
உணராத உள்ளங்கள்
மறைந்ததும் உணர்த்திடும்
எந்நொடியும் எவருக்கும் ...
கனவிலும் தொடர்ந்திடும்
கல்மனதையும் கரைத்திடும் ...

கனவோடு மட்டுமா
காலமும் வாழ்ந்திடும் நெஞ்சில் ..
இணையாக முடியுமா
இவ்வுலகில் எவரும் அன்னைக்கு ..
மறக்கத்தான் இயலுமா
தாய்மடி சுகத்தை இறுதிவரை ...

எனதன்னை மறைந்தாலும்
என்னுடனே வாழ்கிறார் ...
கனவிலும் வருகிறார்
களிப்பில் ஆழ்த்துகிறார் ...
என்னுடலில் வலியிருந்தால்
அவர் விழிகள் கசிந்திடும் ...
உள்ளத்தில் சுமையிருந்தால்
பாரமிழக்க வழிவகுப்பார் ....

தாயுள்ளோர் மறவாதீர்
தாங்கிடுங்கள் உள்ளவரை ...
உயிர் கொடுத்தத் தாயை
உயிராகக் காத்திடுங்கள் ...
தாயில்லாரை வேண்டுகிறேன்
நினைத்திடுங்கள் முப்பொழுதும் ..


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Jan-17, 7:40 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 708

மேலே